Thursday, June 9, 2011

அம்பானி கம்பனியில் தயாநிதிக்கு பங்கு ! வந்து விழுகிறது அடுத்த இடி !!


தயாநிதி மாறனுக்கும், அவரது மனைவிக்கும், அம்பானி குரூப்பின் மூன்று நிறுவனங்களில் பங்குகள் இருக்கின்றன!

தயாநிதியின் விவகாரங்களைத் தோண்டத் தோண்ட, தினமும் வெவ்வேறு பூதங்கள் வெளியாகின்றன. இன்று புதிதாகக் கிளம்பியுள்ள பூதம், அம்பானியின் கம்பனிகளில் தயாநிதிக்கு பங்குகள் இருக்கின்றன என்பதே! இந்த பங்கு விவகாரம் தயாநிதியை மேலும் இறுக வைக்கிறது!

“அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்படவேண்டும்” என்ற பிரதமரின் உத்தரவால், வட இந்திய அமைச்சர்களுக்கு இருக்கும் நெருக்கடிகளைவிட, நம்ம தமிழக அமைச்சர் தயாநிதி மாறனுக்கு நெருக்கடி அதிகம்.

பிரதமர் மன்மோகன்சிங், ப.சிதம்பரம், ஏ.கே. அன்டனி, பிரணாப் முகர்ஜி, கபில் சிபல் ஆகியோரின் சொத்து விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் வில்லங்கங்கள் ஏதுமில்லை.

ஆனால், தயாநிதி மாறனின் சொத்து விபரங்களில்தான், வில்லங்கங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது, அம்பானியின் நிறுவனங்களில் தயாநிதிக்கும், அவரது மனைவிக்கும் உள்ள பங்குகள்!

தயாநிதி மாறனுக்கும், அவரது மனைவிக்கும் பங்குகள் இருக்கும் அம்பானி குரூப்பின் மூன்று நிறுவனங்கள்: Reliance Industries, Reliance Natural Resources Ltd, Reliance Communications (RCom). இவற்றில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தகவல் தொழில்நுட்ப நிறுவனம்.

தயாநிதி, தகவல் தொழில்நுட்பத் துறையின் அமைச்சராக 2004-2007 காலப்பகுதியில் இருந்திருக்கிறார். அதே காலப்பகுதியில் அம்பானியின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருந்திருக்கின்றார்! இது ஒரு அப்பட்டமான conflicts of interest!

இதை வைத்துக்கொண்டு, 2004-2007 காலப்பகுதியில் அம்பானி குரூப் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள், அல்லது ஒப்பந்தங்கள் பற்றி குற்றச்சாட்டுகளை எழுப்ப முடியும். முடிவெடுக்கும் அதிகாரமுள்ள கபினெட் அமைச்சரின் conflicts of interest, இந்தியக் குற்றவியல் சட்டத்தில் லேசான விசயமல்ல.

பொறுத்து இருந்து பாருங்கள், அம்பானி குரூப்பின் போட்டி நிறுவனங்கள், இந்த விவகாரத்தைக் கையில் எடுக்கப் போகின்றன!

2 comments:

Chittoor Murugesan said...

தயா மீது ஆருக்குமே தயா வரமாட்டேங்குது.

நோண்டி நுங்கெடுக்கிறிங்களே கண்ணு!
பாராட்டுக்கள்

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

வணக்கம் உங்களின் பதிவு ஒன்றை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளோம்
நேரம் கிடைக்கும்போது படித்துச் செல்லவும் நண்பரே நன்றி


http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_29.html